×

பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜெயசூர்யா விலகல்: உருக்கமான பேட்டி

பல்லேகல்லே: சொந்த மண்ணில் டி.20 உலக கோப்பையில்சூப்பர் 8 சுற்றில் இலங்கை 3 போட்டியிலும் தோல்விஅடைந்து பரிதாபமாக வெளியேறியது. இதனால் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஜெயசூர்யா பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: வேறு ஒருவருக்கு பதவியை வேண்டிய நேரம் இது என்று நான் நினைத்தேன்.2 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து தொடரின் போது நான் நீண்ட காலம் இந்தப் பணியில் நீடிப்பேன் என்ற நம்பிக்கை இல்லை என்று சொன்னேன்.

அதற்குள் நான் இந்த முடிவை எடுத்திருந்தேன். உலகக் கோப்பையில் ஒரு நல்ல மனநிலையில் பயிற்சியாளராக இருந்து வெளியேற முடியும் என்று நினைத்தேன். நான் விரும்பிய அளவுக்கு அதைச் செய்ய முடியவில்லை, அதைப் பற்றி நான் வருத்தப்படுகிறேன். எனது ஒப்பந்தம் ஜூன் வரை முடிவடைகிறது, நான் இன்னும் கிரிக்கெட் வாரியத்திற்கு அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியையும் தெரிவிக்கவில்லை. நான் இதைச் சொல்வேன் என்று கூட அவர்களுக்குத் தெரியாது. இதுபற்றி அவர்களுடன் விவாதிப்பேன். வேறு யாரையாவது நியமிக்க முடிந்தால் நிச்சயம் விலகுவேன்.கடந்த ஒன்றரை வருடங்களாக அணியை நல்ல நிலைக்கு கொண்டு வர முடிந்தது.

ஒருநாள் போட்டியில் 9வது இடத்தில் இருந்தோம். சாம்பியன்ஸ் டிராபிக்கு கூட தகுதி பெறவில்லை. ஆனால்தற்போது 4வது இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. டெஸ்ட்டில் 6வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளேன். நான் தனியாக இதைச் செய்யவில்லை. எனது துணை ஊழியர்கள் எனக்கு நம்பமுடியாத உதவியை வழங்கினர், என்றார்.

 

Tags : Jayasuriya ,Pallekale ,Sri Lanka ,T20 World Cup Super 8 round ,
× RELATED டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ்...