சென்னை : தமிழ்நாடு முதலமைச்சராக 3 முறை பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டார் ஓ.பன்னீர்செல்வம். திமுகவில் இணைந்த பிறகு, ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவரம் பின்வருமாறு..
*திமுகவில் இணைந்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். அண்ணா தொடங்கிய இயக்கம், கலைஞர் கட்டிக்காத்த இயக்கம் திமுக.
*சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தி வந்துள்ளார் மு.க.ஸ்டாலின்.
*தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். எடப்பாடி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் வெறும் பூஜ்ஜியமாகவே உள்ளது.
*எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள எந்த திட்டமும் மக்கள் மனதில் நிற்கவில்லை. தென் மாவட்டத்தில் இருந்து எந்த தலைவரும் வந்துவிடக் கூடாது என நினைத்தார் ஈபிஎஸ்.
*அரசியல் பண்பாடோடு கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆணவப் போக்குடன் நடந்து கொள்ளும் ஈபிஎஸ், எந்த காலத்திலும் அரசியலில் வெற்றி பெறமுடியாது.
*பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நாளிலிருந்து அதிமுகவை அழிவுப் பாதையில் அழைத்து செல்கிறார் ஈபிஎஸ். கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்டவே திமுகவில் இணைந்துள்ளேன்.
*தாய் கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கும் மனநிலை அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.
*அண்ணாவை போல சட்டமன்றத்தில் தாயுள்ளத்துடன் செயல்பட்டு அனைவருக்கும் வாய்ப்பு வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதல்வர் வாய்ப்புத் தந்தால் சட்டமன்றத் தேர்லில் போட்டியிடுவேன்.
*முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பல சாதனைகளை செய்துள்ளது. திமுக ஆட்சியில் பெண்கள் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்கள்.
*நான் முதலமைச்சராக பதவியேற்றபோது பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம் என்று என்னை கலைஞர் பாராட்டினார். நான் தொண்டனாகத்தான் திமுகவில் இணைந்துள்ளேன். திமுகவில் இணையும் முடிவை நான் சுயமாக சிந்தித்து எடுத்தேன்.
*இனிமேல் அரசியலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுக்கின்ற முடிவுக்கு நான் முழுமையாக கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
*திமுகவை எதிர்க்கும் சக்தி இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழலில் யாருக்கும் இல்லை.
