செய்யாறு, பிப்.9: செய்யாறு அருகே ஊராட்சி மன்ற தலைவியை சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா நமண்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்(42). இவரது மனைவி குணபூசனம்(37), ஊராட்சி மன்ற தலைவர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அமுல்ராஜ்(35) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாம். இதனால் கடந்த மாதம் 30ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குணபூசனம் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அமுல்ராஜ், அவரது சகோதரர் பாண்டியராஜ்(31), உறவினர்கள் செல்வ விநாயகம்(32), அருள், சுதாகர், ஓம்பிரகாஷ், முனியம் ஆகியோர் குணபூசனத்திடம் தகராறு செய்துள்ளனர்.