அரசு மருத்துவ கல்லூரியில் மாணவி தற்கொலை முயற்சி

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் கீர்த்தனா (20) என்ற மாணவி 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், மருத்துவ கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டு இருந்த இவர், பின்னர் தனது அறைக்கு சென்றார். நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் கீர்த்தனாவின் அறைக்கு சென்று பார்த்தபோது, அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

உடனே அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார், மாணவி தங்கி இருந்த அறைக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் கடந்த ஒரு வாரமாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவரது அறையில் சோதனை செய்து பார்த்த போது, படுக்கை அறையில் அதிகளவில் தூக்க மாத்திரைகள் சிதறி கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாணவி கீர்த்தனா தற்கொலை முயற்சிக்கு காதல் விவகாரமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: