ஊட்டி,பிப்.8: ஊட்டி என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளம் சீரமைக்கும் பணிகள் இரு ஆண்டுக்கு பின் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான பார்க்கிங் வசதிகள் இல்லை. தாவரவியல் பூங்காவிற்கு செல்லும் வழித்தடத்தில் என்சிஎம்எஸ்.,(கூட்டுறவு நிறுவனம்) சொந்தமான பார்க்கிங் தளம் மட்டுமே உள்ளது.
இந்த பார்க்கிங் தளம் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத நிைலயில், கடந்த இரு ஆண்டுக்கு முன் அந்த பார்க்கிங் தளத்தை சீரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் முறையாக பார்க்கிங் தளத்தை சீரமைக்கவில்லை. சீரமைப்பு பணிகளை பாதியில் விட்டுச் சென்றனர்.