டெல்லி: டெல்லி பிரதமர் அலுவலகம் ஒட்டியுள்ள 3 குடிசைப் பகுதிகளில் வசிக்கும் 717 குடும்பங்களை வரும் மார்ச் 6ம் தேதிக்குள் காலி செய்ய ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுமார் 45 கி.மீ.க்கு அப்பால் மாற்றுக் குடியிருப்புகள் வழங்கியதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், காலி செய்யவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
