47 பேர் கைது அண்ணா நினைவு நாளையொட்டி சிறுவாச்சூர் கோயிலில் பொதுவிருந்து

பெரம்பலூர், பிப்.5: தமிழக அரசு உத்தரவின்படி, பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் அண்ணாவின் 52வது நினைவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் சமபந்தி நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் (பொ) ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பூவை செழியன், செயல்அலுவலர் அருண்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழி பாடு செய்யப்பட்டு, 300க்கும் மேற்பட்ட ஏழை பெண்களுக்கு புடவைகளும், பொதுமக்களுக்கு சமபந்தி விருந்தும் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக உணவு கள் பொட்டலமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றிஅனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: