திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே 14 வயது சிறுவன் ஒட்டிச் சென்ற கார், சாலையோர வீட்டின் சுற்றுச் சுவற்றை உடைத்துக்கொண்டு தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. அதிகாலை 2.30 மணிக்கு தனது வீட்டாருக்கு தெரியாமல் கார் சாவியை எடுத்து வீட்டையும் வெளியே பூட்டிவிட்டு, பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது நண்பனுடன் டீ குடிக்கச் செல்லும் போது விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக சிறிய காயங்களுடன் இருவரும் தப்பினர். சிறுவனின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
