புதுக்கோட்டை, பிப். 5: புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான உதவித்தொகை, காதொலி கருவி, செயற்கை கால், ஊன்றுகோல், மூன்று சக்கர வாகனங்கள், அடையாள அட்டை என பல்வேறு தேவைகளுக்காக தொடர்புடைய அலுவலகத்துக்கு சென்று அணுகி வந்த நிலையை மாற்றி எவ்வித சிரமமும் இல்லாமல் தங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.