டெல்லி : இந்தியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிப்பது குறித்து ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பிற நாடுகளை போன்று இந்தியாவிலும் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசித்து வருவதாக ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
