போச்சம்பள்ளி, பிப்.5: போச்சம்பள்ளி அருகே, வடம்பலம்பட்டி கிராமத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, திருமுறை ஒதுதல், நான்கம் கால வேள்வி மற்றும் 7 மணிக்கு சிவபேரிகைகள், மேள வாத்தியம் முழுங்க பால்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு சிவவேள்வி நிறைவு பெற்று திருக்குடங்கள் புறப்பாடு முடிந்த பின் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. விழாவில் பெண்கள் சீர் வரிசையுடன் காளை, குதிரை நடனத்துடன் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர்.