புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

வலங்கைமான்,பிப்.18: வலங்கைமான் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக ரமேஷ் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த முத்துலட்சுமி என்பவர் பணி மாறுதலாகி திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராக சென்றார். அடுத்து தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த ரமேஷ் வலங்கைமான் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

 

Related Stories: