மதுரை, ஏப். 16: மதுரை, பச்சரிசிக்காரத்தெருவை சேர்ந்தவர் விகாஷ்(37). இவர் அதே பகுதியில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு கடந்த மார்ச் 30ம் தேதி புதுமாகாளிப்பட்டியை சேர்ந்த பிரகாஷ்(27) மற்றும் சந்துரு, சூர்யா ஆகியோர் வந்துள்ளனர். அவர்கள் கொண்டு வந்த பழைய தங்க நகையை அவரிடம் விற்பனை செய்துள்ளனர்.
இவர்கள் கொடுத்த 15 பவுன் நகையை விகாஷ் பரிசோதித்த போது, அதில் வெறும் 10 பவுன் மட்டுமே தங்கம் இருப்பதும், மீதமுள்ள 5 பவுனான 40 கிராம் பித்தளை கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலப்பட தங்க நகை கொடுத்து மோசடி செய்த பிரகாஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெற்குவாசல் போலீசில் விகாஷ் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் பிரகாஷ் உள்பட 3 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
