சென்னை: யார் இறந்தாலும் பரவாயில்லை, தான்தான் முதலமைச்சர் என்று விஜய் பேசுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் ‘தன்னை பார்க்க வருபவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரூர் நெரிசலில் 41 பேர் இறந்த நிலையிலும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் பேசி வருகிறார். மக்கள் மீது யார் அக்கறை செலுத்துகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற முடியும்’ எனவும் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
