கயத்தாறில் இளம்பெண்களிடம் நகை பறிப்பு

கயத்தாறு, பிப்.4:  கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த சிவக்குமார் மனைவி முத்துராணி (32) இவர் கயத்தாறிலுள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்று விட்டு நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கயத்தாறு-மதுரை ரோட்டில் வரும்போது பைக்கில் பின்னால் வந்த மர்ம நபர்கள் இருவர், முத்துராணியை கீழே தள்ளி விட்டு அரை பவுன் செயினை பறித்து சென்றனர். அதன் பின்னர் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் எதிரே இருசக்கர வாகனத்தில் தனது தங்கை சண்முகபிரியாவுடன் சென்றுகொண்டிருந்த சாலைப்புதூரை சேர்ந்த செல்வ ராதிகா என்பவரையும், மர்ம நபர்கள் கீழே தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த 10 பவுன் செயினை பறித்துக்கொண்டு  தப்பினர். தகவலறிந்த கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தப்பியோடிய மர்ம நபர்களை சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து தேடி வருகின்றனர்.

Related Stories: