மதுரை: தமிழ்நாட்டில் தெருக்களில் உள்ள ஜாதி பெயர்களை நீக்க அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரி மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் ஜாதி பெயர்களை நீக்க 1978ல் பிறப்பித்த அரசாணைப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நடவடிக்கை எடுத்தது குறித்து அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
