ஈரோடு, பிப்.4:நம்பியூர் அருகே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும் சுகாதார வளாகம் செயல்படாமல் உள்ளதால் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நம்பியூர் தாலுகாவுக்குட்பட்ட குருமந்தூர் ஊராட்சியில் 3500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தனிநபர் இல்லக்கழிப்பிடங்கள் மிகவும் குறைவாக உள்ளதால் திறந்த வெளிப்பகுதிகளை கழிப்பிடங்களாக பயன்படுத்தி வந்தனர். இதனால், ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் குருமந்தூர் அம்மன்கோயில் அருகில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனியாக சுகாதார வளாகம் கட்டப்பட்டது.