ஈரோடு, பிப்.4:ஈரோடு மாவட்டம் பவானி செங்காடு ராணா நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (30). பெயிண்டர். இவரது மனைவி சுமித்ரா (26). இவர்களுக்கு 2 பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமித்ரா 5வது முறையாக கருவுற்று, கடந்த 29ம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் 5 ஆவதாக பெண் குழந்தையை பெற்றார். இதையடுத்து, சுமித்ராவை மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு செய்யுமாறு கூறினர். ஆனால், சுமித்ராவும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று சுமித்ராவிடம் விசாரணை நடத்தி, குடும்ப கட்டுப்பாடு செய்வது குறித்து கவுன்சிலிங் அளித்தார்.