மதுரை: தென்கலை நாமத்தை அகற்றி வடகலை நாமத்தை மீண்டும் நிறுவ கோரி தொடர்ந்த மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. கும்பகோணம் வல்லம் ஸ்ரீநரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கை வைகானச ஆகமத்தை பின்பற்றி நடத்த இடைக்கால தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்ந்த கும்பகோணத்தை சேர்ந்த பத்ரி நாராயணன் என்பவருக்கு ஐகோர்ட் கிளை ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
