சிவகங்கை, பிப்.2: கோழிகளுக்கு பிப்.14 வரை தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்: கால்நடை பராமரிப்புத் துறையால் 1.2.2021 முதல் 14.2.2021 வரை இருவாரங்களுக்கு கோழிக் கழிச்சல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள 2 கால்நடை மருத்துவமனை, 79 கால்நடை மருந்தகங்களிலும் மற்றும் 45 கால்நடை கிளை நிலையங்களிலும், கோழி கழிச்சல் தடுப்பூசி பணி போடப்பட உள்ளது.