கொல்கத்தா: டெல்லி மற்றும் கொல்கத்தாவின் அசன்சோல், துர்காபூர் மற்றும் மேற்கு பர்தமான் மாவட்டத்தின் பிற பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகள் சட்டவிரோத மணல் மற்றும் நிலக்கரி வர்த்தகம் தொடர்பான தற்போதைய விசாரணையுடன் தொடர்புடையவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
