சென்னை: லலிதா ஜூவல்லரியில் கொள்ளை வழக்கில் 400 கிராம் நகைகளை போலீசார் மீட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கொள்ளையனை தேடி வருகின்றனர். சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தவர் பிரவீன்குமார் சிங். சமீபத்தில், கடையில் உள்ள தங்க நகைகளை எடைபோடும்போது 5 கிலோ தங்க நகைகள் மாயமானது தெரிந்தது. இதுகுறித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், பிரவீன்குமார் சிங், நகைகளை திருடியது சிசிடிவி கேமரா மூலம் உறுதி செய்யப்பட்டது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.