சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக அரசுக்கு பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் புகழாரம் சூட்டியுள்ளார். பாஜக கவுன்சிலர் என்ற மனநிலை இல்லாமல் எனது வார்டில் பணிகளை செய்து கொடுத்தற்கு திமுக அரசுக்கு நன்றி. நான் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்ததற்கு திமுக அரசுக்கு நன்றி என உமா ஆனந்த் கூறினார்.
