சிதம்பரம், ஜன. 28: சிதம்பரம் அருகே உள்ள கவரப்பட்டு மெயின் ரோடு பகுதியை சேர்ந்த உத்திராபதி மகன் ஜெகதீசன்(47). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது இவரது காலில் ஏதோ ஒரு பூச்சி கடித்ததாக கூறி சுண்ணாம்பு வைத்துக் கொண்டு வந்தவர், இவரது வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கவரபட்டில் உள்ள சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
