ஊட்டி,ஜன.29: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், தேர்பவனி ஆகியவை நடந்தது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருக பெருமான் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மற்றும் தேர் பவனி நிகழ்ச்சி நடந்தன. ஊட்டியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று காலை முதல் சிறப்பு வழிபாடுகள், அர்ச்சனைகள், ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பகல் 12 மணிக்கு திருத்தேர் பவனி நடந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கோயிலில் இருந்து எல்க்ஹில் விநாயகர் கோயில் வரை தேர் சென்றது. பின் அங்கிருந்து மீண்டும் கோயிலை சென்றடைந்தது.