லாரியில் வந்த எழுது பொருட்கள் புளியந்தோப்பு பகுதி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்

கொள்ளிடம், ஜன. 28: மயிலாடுதுறை கலெக்டர் லலிதாவுக்கு மாதிரவேளூர் ஊராட்சி புளியந்தோப்பு தெரு மகளிர் குழுவை சேர்ந்த செல்வி கோரிக்கை மனு அனுப்பினார். அதில், கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் ஊராட்சியில் புளியந்தோப்பு தெரு உள்ளது. இங்கு 20 குடும்பங்களை சேர்ந்த 120 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் காட்டு நாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் இதுவரை சாதி சான்றிதழ் பெற்றது கிடையாது. ஆரம்ப காலத்திலிருந்தே இவர்களுக்கு சாதி சான்றிதழ் மறுக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் உள்ள மாணவர்கள் துவக்கப்பள்ளிக்கு சென்று அதைதொடர்ந்து உயர்நிலைப்பள்ளிக்கு சென்று மேல்கல்வியை தொடர முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் வகையில் உடனடியாக அவர்களுக்கு உரிய சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: