சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கத் தகடுகள் மாயமான விவகாரம் – சென்னையில் நடந்த அமலாக்கத் துறை சோதனைகள் நிறைவு பெற்றது. இந்த வழக்கில் ஏற்கனவே கைதான அம்பத்தூரில் உள்ள பங்கஜ் பண்டாரியின் நகை செய்யும் நிறுவனம், வேப்பேரியில் உள்ள அவரது மகன் வீடு, கொண்டித்தோப்பில் உள்ள நகைக்கடை பணியாளர் கல்பேஷ் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது.பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
