உடுமலை,ஜன.28:உடுமலை ஒன்றியம் எலையமுத்தூரில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சிறப்பான செயல்பாட்டுக்காக, திருப்பூரில் நடந்த குடியரசு தின விழாவின்போது, சிறப்பு விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழை மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனகம் பெற்றுக்கொண்டார்.