ஊட்டி,ஜன.28: ஊட்டியில் சுகாதாரம் இல்லாத கடைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர். ஊடடியில் உள்ள மார்க்கெட் மற்றும் நகரில் உள்ள கடைகளில் சுகாதாரம் இல்லாமல் சில கடைகள் செயல்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகா்ர சென்றுள்ளது. இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மார்க்கெட் பகுதியில் சுகாதாரம் இன்றி செயல்பட்ட இரு கடைகள் கண்டறியப்பட்ட அந்த கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.