ஈரோடு, ஜன. 24: அந்தியூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், பவானிசாகர் தொகுதி செயலாளர் தம்பிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். வேளாண் தொடர்பான குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை தமிழக அரசே இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.