மதுரை: திருப்பரங்குன்றத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழா மட்டுமே நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் தர்கா தரப்பில் சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்; தர்கா தரப்பில் கால்நடைகளை பலியிடவோ, மாமிசம் சமைக்கவோ, அசைவ உணவு கொண்டு செல்லவோ கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது
