டூவீலரில் சென்ற பெண்ணை கீழே தள்ளி 11 பவுன் பறிப்பு

மேலூர், ஜன.21: மேலூர் அருகே மணபட்டியை சேர்ந்தவர் கார்த்திக் மனைவி மாதூரி(28). இவர் நேற்று மாலை தனது மகள் உடன் நான்கு வழிச்சாலையில் சத்தியபுரம் சந்திப்பில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் டூவீலரில் வந்த 2 பேர் மாதுரியை வாகனத்தில் இருந்து தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் இருந்த 11 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: