லாரி டிரைவர் மர்மச்சாவு.

திருமங்கலம், ஜன.20: திருமங்கலம் அருகே லாரி டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் கீழக்குறிச்சியை சேர்ந்தவர் மாது(52). லாரி டிரைவர். கடந்த 17ம் தேதி திருச்செங்கோடு  சென்று தனது கம்பெனி லாரியில் லோடுகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்றார். நேற்று முன்தினம் அதிகாலை மதுரை மாவட்டம் எலியார்பத்தி டோல்கேட் அருகே இயற்கை உபாதைக்காக லாரியை நிறுத்தி இறங்கியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாது பணி செய்யும் அதே லாரி நிறுவனத்தின் மற்றொரு டிரைவர் எலியார்பத்தி டோல்கேட்டில் தங்களது லாரி நிற்பதை கண்டு வந்து பார்த்தார். அப்போது மாது இறந்து கிடப்பது தெரியவரவே உறவினர்கள் மற்றும் நிறுவனத்திற்கு தகவல் கூறியுள்ளார். கூடக்கோவில் போலீசார் மாதுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: