மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரணையை தொடங்கியது. மனுதாரர் ராமரவிக்குமார் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை, உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை; பொது அமைதி கெடும் என்பது சாக்குபோக்கு என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
