தந்தை, மகனை தாக்கிய இருவர் கைது

முசிறி , ஜன.19:  முசிறி அருகே உள்ள தண்டலைப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அஜித் ஆகியோருக்கும் இடையே நேற்று முன்தினம் இறைச்சி பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் மணிகண்டன் மற்றும் அஜித் ஆகிய இருவரும் செல்வகுமாரையும் அவரது தந்தை சாமிநாதன் என்பவரையும் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.காயமடைந்த இருவரும் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இருவரும் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டன் மற்றும் அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: