ஓசூர், ஜன.11: ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர பகுதிகளில் 13 முதல் 17வது வார்டுகள் மற்றும் 40 முதல் 45வது வார்டுகள், மத்திகிரி, டைட்டான் டவுன்ஷிப், அம்மன் நகர், அந்திவாடி, மிடுகரப்பள்ளி, அரசனட்டி, மூக்கொண்டப்பள்ளி, கொத்தூர் பகுதிகளில் திமுக சார்பில், மக்கள் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதில் கட்சிக்கொடி ஏற்றிய சத்யா எம்எல்ஏ, பாளையத்தில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு, அதிமுக அரசு செய்துள்ள முறைகேடுகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறினார். அப்போது, பொதுமக்கள் தெரிவித்த குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை டவுன்ஷிப் திமுக நிர்வாகிகள் கதிரவன், சங்கர் மற்றும் சுமன் ஆகியோர் செய்திருந்தனர்.