ஊட்டி, ஜன. 7: ஊட்டி நகர தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நொண்டி மேடு பகுதியில் நடந்தது. நகர செயலாளர் ஜார்ஜ் தலைமை வகித்தார். ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு இதில் தங்களது குறைகளை தெரிவித்தனர்.
பலர் மனுக்களும் அளித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு அதிமுக., அரசின் மக்கள் விரோத போக்கு, தவறான அணுகுமுறைகள் ஆகியவை குறித்து பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர் இளங்கோவன், நகர துணை செயலாளர் ரீட்டா மேரி பர்னபாஸ், ரவீந்திரன், கார்டன் கிருஷ்ணன், புஷ்பராஜ், மஞ்சுகுமார், சந்திரசேகர், செல்வா, ஜுபீர், ஸ்டேன்லி, காந்தள் சம்பத், தியாகு, பிரதாப், கமலக்கண்ணன், தேவா, ரங்கநாதன், உமேஷ், ஆர்டிஓ., ரவி, சுரேஷ், சூரி, பாபு, அன்வர் பாஷா, கஜேந்திரன், அருள் தாஸ், சிவலிங்கம்., மகளிர் அணியைச் சார்ந்த லூயிசா, பிரியா, வனிதா, கண்ணகி, செல்வி, கவிதா, சாந்தினி பானு, மகாலட்சுமி, முபீனா, ரெஜினா, மெட்டில்டா, பிரியா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.