டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு துறைமங்கலம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,ஜன.7:டெல்லியில் போராடும் விவசாயிக ளுக்கு ஆதரவாக பெரம்ப லூரில், துறைமங்கலம் பொதுமக்கள், நற்பணி மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக பல மாநில விவசாயிகள் டெல் லியில் முற்றுகையிட்டு 6 வாரங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். இவர் களுக்கு ஆதரவாக பெரம் பலூர் மாவட்டத்தில் விவ சாய சங்கங்கள்,அரசியல் கட்சிகள், மன்றங்கள் என பலதரப்பட்ட நிலையினரா ல் ஆதரவுப் போராட்டங்கள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு வருகின்றன.

இதனையொட்டி நேற்று பெ ரம்பலூர் நகராட்சிக்கு உட்ப ட்ட துறைமங்கலம் பகுதி யைச் சேர்ந்த 9வது வார்டு பொதுமக்கள், அப்பகுதியி ல் இயங்கிவரும் அம்பேத்கர்நற்பணி மன்றத்தினருடன்இணைந்து பாலக்கரையில் உள்ள கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மன்றத்தின் கவுரவத்தலைவர் தென்றல் சரண்ராஜ், தலைவர் குணா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கிராமத்தலைவர் தங்க சண்முக சுந்தரம், ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் பொன். ஆனந்தராசு ஆகியோர் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக விளக்கி பேசினர். இதில், பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் என 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: