மெக்கானிக் வீட்டில் தீ விபத்து

திருச்செங்கோடு, ஜன.6 :திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் ஏகேஇ தெருவைச் சேர்ந்தவர் மெக்கானிக் மனோகரன் (45). இவரும். இவரது மனைவி சாந்தியும் நேற்று முன்தினம் வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். நேற்று மதியம் இவரது வீடு திடீரென தீ பற்றி எரிந்தது. பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின் கசிவால் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: