உடுமலை,ஜன.5: ஆதித் தமிழர் பேரவையின் மகளிர் அணி சார்பில், தனித் தொகுதிகளில் அருந்ததியருக்கு சமூக நீதி என்ற தலைப்பில் உடுமலையில் நேற்று முன்தினம் மாநாடு நடைபெற்றது. திருப்பூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவுசல்யா தலைமை வகித்தார். உடுமலை நகர மகளிரணி செயலாளர் தேவி வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவர் சகுந்தலா, மாவட்ட பொறுப்பாளர் சரோஜினி மாசிலாமணி, அருக்காணி, சாவித்திரி, ஈஸ்வரி, சுகந்தி, சிந்தாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மடத்துக்குளம் தொகுதி எம்எல்ஏ.வுமான ஜெயராமகிருஷ்ணன் வாழ்த்தி பேசினார். ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் சிறப்புரையாற்றினார்.