ஊட்டி, ஜன. 5: ஊட்டியில் நடந்த மரடோனா நினைவு கால்பந்து போட்டியில் தோடர் பழங்குடியின அணி வெற்றி பெற்றது. மறைந்த கால்பந்து ஜாம்பவான் மரடோனா நினைவு கால்பந்து போட்டி ஊட்டியில் நடந்தது. இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்தும் 32 அணிகள் கலந்துக்கொண்டன. இறுதி போட்டியில் ஆர்எம்எப்சி தோடா மற்றும் ஷூலெஸ் ஒன்ஸ் அணிகள் மோதின. நேற்று இறுதி போட்டி நடந்தது. சாரல் மழைக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக நடந்தது.
ஆட்ட தொடக்கத்தில் ஷூலெஸ் ஒன்ஸ் அணியின் வீரர் கவுரி இரு கோல்களை அடித்து, தனது அணியை முன்னிலை பெற செய்தார். முதல் பாதியில் ஷூலெஸ் ஒன்ஸ் அணி 2-1 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால், இரண்டாம் பாதியில் ஆர்எம்எப்சி., தோடா அணி வீரர்கள் சுதாரித்து தொடர்ந்து 3 கோல்களை அடித்தனர்.