நஞ்சநாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா பொருத்த ரூ.1 லட்சம் நிதி வழங்கல்

ஊட்டி, ஜன.5:  ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் வழங்கினார். ஊட்டி அருகேயுள்ள நஞ்சநாடு கிராம மக்கள், தங்களது கிராமத்தின் பதுகாப்பிற்காக சிசிடிவி பொருத்த உதவி செய்ய மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் அதிமுக  மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, அந்த கிராமத்திற்கு சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், அதிமுக  அமைப்பு செயலாளர் அர்ஜூணன், ஊட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் பெள்ளி, மேற்கு ஒன்றி செயலாளர் குமார், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்திரன் தலைமை வகித்தார். விழாவில், மாவட்ட மத்திய கூட்றவு வங்கித் தலைவர் கப்பச்சி வினோத், நஞ்சநாடு கிராம மக்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். தொடர்ந்து, கப்பத்தொரை மற்றும் போர்த்தியாடா பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: