மதுரை, ஜன. 5: மதுரையில் செல்போன் ேஷாரூம் அதிபரின் மனைவியை குழந்ைதயுடன், மொட்டை மாடியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டிலிருந்த வெள்ளி, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை இன்மையில் நன்மை தருவார் கோயில் அருகேயுள்ள ஒரு அப்பார்ட்மெண்ட் வீட்டில் கீழ்தளத்தில் வசித்து வருபவர் துளாராம். செல்போன் விற்பனை ஷோரூம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் வீட்டுக்கு வந்த துளாராம் சாப்பிட்டு விட்டு ேஷாரூம் சென்றுவிட்டார். வீட்டிலிருந்த இவரது மனைவி செண்பகவள்ளி, துணிகளை காய பாடுவதற்காக, தனது 5 வயது குழந்தையை தூக்கி கொண்டு மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்போது, இவரை பின்தொடர்ந்து சென்ற மர்மநபர், மொட்டை மாடி கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு, வீட்டுக்குள் நுழைந்து பீரோவிலிருந்த நான்கரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் முக்கால் பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார். சிறிதுநேரத்தி