ஊட்டி, ஜன. 4: நீலகிரி மாவட்டத்தில் நேற்று 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,976 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 13 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,820 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 46 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தற்போது 110 பேர் அரசு மருத்துவமனை, கோவிட் கேர் மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.