சிட்னி: ஆஸ்திரேலியா அணியுடனான 3வது ஒரு நாள் போட்டியின்போது, விலா எலும்பிலும், மண்ணீரல் பகுதியிலும் காயம் ஏற்பட்டு ஆஸி மருத்துவமனையில் ஐசியுவில் சேர்க்கப்பட்டிருந்த இந்திய நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து, ஐசியுவில் இருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ஷ்ரேயாஸ் ஐயரின் உடல் நிலை சீரானதால், சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார்’ என்றன.
