செய்யாறு, டிச.31: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் மதியழகன்(65). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த வேலையாக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பினார். வந்தவாசி- காஞ்சிபுரம் சாலை கூழமந்தல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வேகத்தடையை கடந்தபோது திடீரென நிலை தடுமாறி பைக் கவிழ்ந்தது. இதில் கீழே விழுந்ததில் படுகாயமடைந்த மதியழகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.