செய்யாறு, டிச.30: செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், செய்யாறு சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். வெம்பாக்கம் தாலுகா கரந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்(25). இவரும் அதே கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ராஜ்குமார் தன்னை காதலிக்கும்படி கூறி இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும், கடந்த சில மாதங்களாக பாலியல் தொந்தரவும் செய்து வந்தாராம். இதனால் மனமுடைந்த இளம்பெண் கடந்த 27ம் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.