காங்கயம் கிழக்கு நகர தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம்

காங்கயம், டிச.30: காங்கயம் கிழக்கு நகர தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.காங்கயம் கிழக்கு நகர பொறுப்பாளர் ஆயக்காடு செந்தில் தலைமையில் திண்ணை பிரசாரம் முஸ்லிம் வீதி, சத்திரம் வீதி சென்னிமலை ரோடு ஆகிய பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு  சென்று மக்களை சந்தித்து குற்றப்பத்திரிகை நகல்கள் மற்றும் சுவரொட்டிகளை வழங்கி கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசின் அவல ஆட்சியை பற்றி நிர்வாகிகள் எடுத்துக்கூறினர். காங்கயம் முஸ்லிம் வீதி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அ.தி.மு.க. அரசை நிராகரிக்கிறோம் என்னும் தலைப்பில் நிர்வாகிகள், பொதுமக்களிடமிருந்து பதாகையில் கையெழுத்து பெறப்பட்டது. இதில், காங்கயம் மேற்கு நகர செயலாளர் காயத்ரி சின்னுசாமி உள்பட திமுக  நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொணடனர்.

Related Stories: