சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி நடத்த வேண்டும். மழையால் நெல் மூட்டைகள் சேதம் அடையாமல் பாதுகாக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்ட ஆட்சியர்களுடன் பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர்.
