சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் கேட்டறிந்தார். மக்களின் புகார்கள் எப்படி கையாளப்படுகின்றன என்பது பற்றியும் அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.
